பள்ளிக்காலமே..

வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே…..கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி நிமிர்த்தும் கூடமிது

ஒடி ஒடி விளையாடி
ஒருவரோடு ஒருவராக
நட்புகள் உருவாகும்
நல் நண்பர்கள் உறவாகும்

மாற்றங்கள் நிகழ்வாகும்
மறுபடியும் தேர்வாகும்
வகுப்பேற்றம் வந்துபோகும்
பிரிவுகள் பலவாகும்

என்னாளும் எதிர்வுகூறும்
ஏற்றமே விளைவாகும்
ஆரம்பம் அத்திவாரம்
பள்ளிக்காலமே படியேற்றும்

எத்துறைக்கும் முதற்புள்ளி
இங்குதான் ஆரம்பம்
கற்றலுக்கு விதையிடும்
பள்ளிக்காலமே ஏணிப்படி.
நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading