“இலட்சிய வாதி”

நேவிஸ் பிலிப் கவி இல(494)

தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய்
கரைந்தாலும் காயாத கற்பூரமாய்
அணைந்தாலும் ஒளி சிந்தும்
சுடரொளியாய்

நெஞ்சங்களில் நிழலாகி
நினைவோடு சங்கமித்தாய்
இலட்சியங்களோடு வாழ்ந்ததால்
இன்று வரலாற்றில் வாழ்கின்றாய்

அகிம்சையே ஆயுதமாய்
இனமானம் உனதாக்கி
கனமான உள்ளத்தில்
தமிழீழத் தாகம் கொண்டாய்

மன ஒடுக்கம் நிதம் கொண்டு
உண்ணா நோன்பு நோற்று நின்றாய்
உடல் விட்டு உயிர் நீங்கும் வரை
மௌனமாய் போர் தொடுத்தாய்

தன்னலமற்ற செயல் பாடும்
உன் சுய அர்ப்பணிப்பும்
எமை மீட்டும் நினைவுகளாக -நீயோ
துளிர் விட்டு வளர்கின்றாய்
நன்றி,,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading