நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

“இலட்சிய வாதி”

நேவிஸ் பிலிப் கவி இல(494)

தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய்
கரைந்தாலும் காயாத கற்பூரமாய்
அணைந்தாலும் ஒளி சிந்தும்
சுடரொளியாய்

நெஞ்சங்களில் நிழலாகி
நினைவோடு சங்கமித்தாய்
இலட்சியங்களோடு வாழ்ந்ததால்
இன்று வரலாற்றில் வாழ்கின்றாய்

அகிம்சையே ஆயுதமாய்
இனமானம் உனதாக்கி
கனமான உள்ளத்தில்
தமிழீழத் தாகம் கொண்டாய்

மன ஒடுக்கம் நிதம் கொண்டு
உண்ணா நோன்பு நோற்று நின்றாய்
உடல் விட்டு உயிர் நீங்கும் வரை
மௌனமாய் போர் தொடுத்தாய்

தன்னலமற்ற செயல் பாடும்
உன் சுய அர்ப்பணிப்பும்
எமை மீட்டும் நினைவுகளாக -நீயோ
துளிர் விட்டு வளர்கின்றாய்
நன்றி,,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan