” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“இலட்சிய வாதி”

நேவிஸ் பிலிப் கவி இல(494)

தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய்
கரைந்தாலும் காயாத கற்பூரமாய்
அணைந்தாலும் ஒளி சிந்தும்
சுடரொளியாய்

நெஞ்சங்களில் நிழலாகி
நினைவோடு சங்கமித்தாய்
இலட்சியங்களோடு வாழ்ந்ததால்
இன்று வரலாற்றில் வாழ்கின்றாய்

அகிம்சையே ஆயுதமாய்
இனமானம் உனதாக்கி
கனமான உள்ளத்தில்
தமிழீழத் தாகம் கொண்டாய்

மன ஒடுக்கம் நிதம் கொண்டு
உண்ணா நோன்பு நோற்று நின்றாய்
உடல் விட்டு உயிர் நீங்கும் வரை
மௌனமாய் போர் தொடுத்தாய்

தன்னலமற்ற செயல் பாடும்
உன் சுய அர்ப்பணிப்பும்
எமை மீட்டும் நினைவுகளாக -நீயோ
துளிர் விட்டு வளர்கின்றாய்
நன்றி,,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan