20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
இளவாலை அமுதுப்புலவர்
ரஜனி அன்ரன் (B.A) “இளவாலை அமுதுப்புலவர்” 23.10.2025
ஆசிரியர் அதிபர் எழுத்தாளர் கவிஞர் நாடகஆசிரியரென
அனைத்து துறைகளிலும் வித்தகனாய் விளங்கி
இலக்கியப் படைப்புக்கள் பலதையும்தந்து
ஈழத்து இலக்கியவானில் சிறகடித்து
கனடிய மண்ணில் காலும்பதித்து
ஐப்பசித் திங்கள் இருபத்திமூன்றில்
இவ்வுலகைவிட்டு நீங்கினாரே அமுதுப்புலவர் !
சமூகப்பற்றும் படைப்பாற்றலும் மனிதநேயமும் கொண்டு
தமிழ் மாணாக்கர் பரம்பரையையும் உருவாக்கி
படைப்பிலக்கியங்கள் பலதும்படைத்து
பட்டங்கள் பரிசுகளும்பெற்று
பாப்பரசரிடம் செவாலியர் விருதினையும் பெற்று
பைந்தமிழுக்கு ஆற்றினாரே பலதொண்டுகளை !
அழகானதைக் கண்டு குதூகலித்து
அலங்கோலங்களைக் கண்டு பதறி
அநியாயங்களைத் தட்டிக் கேட்கும்
அமுதுப் புலவரின் கவிப்படையல்கள்
அனைத்தும் அற்புதப் படைப்புக்களே !
Author: ரஜனி அன்ரன்
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...