இளவாலை அமுதுப்புலவர்

ரஜனி அன்ரன் (B.A) “இளவாலை அமுதுப்புலவர்” 23.10.2025

ஆசிரியர் அதிபர் எழுத்தாளர் கவிஞர் நாடகஆசிரியரென
அனைத்து துறைகளிலும் வித்தகனாய் விளங்கி
இலக்கியப் படைப்புக்கள் பலதையும்தந்து
ஈழத்து இலக்கியவானில் சிறகடித்து
கனடிய மண்ணில் காலும்பதித்து
ஐப்பசித் திங்கள் இருபத்திமூன்றில்
இவ்வுலகைவிட்டு நீங்கினாரே அமுதுப்புலவர் !

சமூகப்பற்றும் படைப்பாற்றலும் மனிதநேயமும் கொண்டு
தமிழ் மாணாக்கர் பரம்பரையையும் உருவாக்கி
படைப்பிலக்கியங்கள் பலதும்படைத்து
பட்டங்கள் பரிசுகளும்பெற்று
பாப்பரசரிடம் செவாலியர் விருதினையும் பெற்று
பைந்தமிழுக்கு ஆற்றினாரே பலதொண்டுகளை !

அழகானதைக் கண்டு குதூகலித்து
அலங்கோலங்களைக் கண்டு பதறி
அநியாயங்களைத் தட்டிக் கேட்கும்
அமுதுப் புலவரின் கவிப்படையல்கள்
அனைத்தும் அற்புதப் படைப்புக்களே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading