” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இளவாலை அமுதுப்புலவர்

ரஜனி அன்ரன் (B.A) “இளவாலை அமுதுப்புலவர்” 23.10.2025

ஆசிரியர் அதிபர் எழுத்தாளர் கவிஞர் நாடகஆசிரியரென
அனைத்து துறைகளிலும் வித்தகனாய் விளங்கி
இலக்கியப் படைப்புக்கள் பலதையும்தந்து
ஈழத்து இலக்கியவானில் சிறகடித்து
கனடிய மண்ணில் காலும்பதித்து
ஐப்பசித் திங்கள் இருபத்திமூன்றில்
இவ்வுலகைவிட்டு நீங்கினாரே அமுதுப்புலவர் !

சமூகப்பற்றும் படைப்பாற்றலும் மனிதநேயமும் கொண்டு
தமிழ் மாணாக்கர் பரம்பரையையும் உருவாக்கி
படைப்பிலக்கியங்கள் பலதும்படைத்து
பட்டங்கள் பரிசுகளும்பெற்று
பாப்பரசரிடம் செவாலியர் விருதினையும் பெற்று
பைந்தமிழுக்கு ஆற்றினாரே பலதொண்டுகளை !

அழகானதைக் கண்டு குதூகலித்து
அலங்கோலங்களைக் கண்டு பதறி
அநியாயங்களைத் தட்டிக் கேட்கும்
அமுதுப் புலவரின் கவிப்படையல்கள்
அனைத்தும் அற்புதப் படைப்புக்களே !