ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 192
வாழ்க்கை

வர்ணங்கள் நிறைந்த ஓவியமாய்
பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாமாய்
சிறந்த பக்கங்கள் நிறைந்த நூலாய்
பல அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை

மலர்களும் முட்களும் கொண்ட
பல வலிகளை கடக்கும் போது
பூந்தோப்பாய் மாற்ற முயன்றிடு
கிடைக்கும் புனித வாழ்க்கை

நலம் பெற்று வாழ்ந்திட
தொலை தூர பார்வையோடு
குறிக்கோளுடன் வாழ்ந்திடு
மகிழ்வுடன் வாழ்வாய் நீ

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan