ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 207
வாழ்க்கை
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டுமென அலைந்து
உயிரும் சொந்தமில்லையென உணர்ந்து
உலகை விட்டு செல்வதுதான் வாழ்க்கை

வாழ்க்கை என்னும் பூந்தோப்பில்
முட்களும் பூக்களும் உண்டு
முட்களை கடந்து பூக்களை இரசித்து
மகிழ்ந்து வாழப் பழகுவோம்

ஒவ்வொரு அனுபவமும்
ஒவ்வொரு பக்கமாய்
வாழ்க்கை என்னும் நூலில் வர
மகிழ்ந்தே வாழ்வோம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan