உணர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025

உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே!

வண்ணப் பாட்டெடுத்தேன் தாயவளே
வாஞ்சையோடு பல கதை தொடுத்தேன்
அன்னை மொழியென கவி கிறுக்கி
உணர்வு பொங்க அகம் குளிர்கின்றேன்

கம்பனின் கருணைக் கவியும்
பாரதியின் கனல் வீரமும்
வணக்கம் சொல்லில் மரியாதையும்
திருக்குறளின் நுட்பமும்,

அழிவின் விளிம்பிலும்
அசையாது எழுந்து நிற்கும் தீச்சுடரே
உன் புகழ் பாடி, உன் வழி நடந்து,
உன் பெருமையுடன் நாங்கள் நிலைக்க

எத்திசை சென்றாலும்
அத்திசை தமிழ் வளர்ப்போம்
எதிர்கால சந்ததிக்கு தமிழின்
விழிப்பின் உணர்வு அளிப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading