” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உணர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025

உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே!

வண்ணப் பாட்டெடுத்தேன் தாயவளே
வாஞ்சையோடு பல கதை தொடுத்தேன்
அன்னை மொழியென கவி கிறுக்கி
உணர்வு பொங்க அகம் குளிர்கின்றேன்

கம்பனின் கருணைக் கவியும்
பாரதியின் கனல் வீரமும்
வணக்கம் சொல்லில் மரியாதையும்
திருக்குறளின் நுட்பமும்,

அழிவின் விளிம்பிலும்
அசையாது எழுந்து நிற்கும் தீச்சுடரே
உன் புகழ் பாடி, உன் வழி நடந்து,
உன் பெருமையுடன் நாங்கள் நிலைக்க

எத்திசை சென்றாலும்
அத்திசை தமிழ் வளர்ப்போம்
எதிர்கால சந்ததிக்கு தமிழின்
விழிப்பின் உணர்வு அளிப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri