உயிரான உயிரே

உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை

நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்

ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்

என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா

முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது

இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே

அன்பாலே என்னை அரவணைத்த காதலனே

இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்

மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்

மதியின் ஒளியாய் வீசும் அழகும்

விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்

கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்

சிவரூபன் சர்வேஸ்வரி

Author: