உயிரான உயிரே

ராணி சம்பந்தர்

பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்

மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம் போலி
உய்த்தறிந்தால் அது ஜாலி

யாருக்கு யார் சேரும் என்பது
எவருக்கு எவர் தேறும் எதுவும்
அவரவர் விதியின் பதி கூறும்

சதியின் விளையாட்டு சித்தி பெற
அன்பு ,பொறுமை ,புரிந்துணர்வும்,
விட்டுக்கொடுப்பும் இருப்பின் பயிர்
பட்டுப்போகாது வளர்வது போல

வாழ்வும் வளம்பெற்று ஒன்றித்து
வளர உயிரான உறவு உன்னதத்
திறவு கோலாகுமே பிரிவின்றி .

Author: