உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன்
உழைப்பே உயர்வு

உழைப்பின் மேன்மை உயர்வு தருமே
பிழைப்புக்கு அதுவே பெருமை யாகும்
வாழ்க்கைக்கு வேண்டும் வளமான உழைப்பு
வண்ணமாய் வாழ எண்ணம்போல் அமையும்

முதலாளி தொழிலாளி வர்க்கம்
முனைப்போடு வாழ்விற்கு வெளிச்சம்
கடின உழைப்பே கடவுள் வரம்
துரிதமாகணும் தூரத்து விடியல்

மேதினம் வந்தது மேன்மைகள் பெற்றது
யாதினும் வர்க்கம் யாபேரும் ஒற்றுமை
வியர்வையின் துளியிலே விளைந்தது ஒருநாள்
விடுதலை கிடைத்தது மேதினம் ஒன்றில்

வியர்வை சிந்தி உழைத்த வர்க்கம்
விடுதலை ஒன்றைப் பெற்றிட்ட மகிழ்வு
போற்றிடும் நாளாய் மே ஒன்று
தொழிலாளர் உயர வழிசமைத்த திருநாள்

நகுலா சிவநாதன்1805

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading