உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன்
உழைப்பே உயர்வு

உழைப்பின் மேன்மை உயர்வு தருமே
பிழைப்புக்கு அதுவே பெருமை யாகும்
வாழ்க்கைக்கு வேண்டும் வளமான உழைப்பு
வண்ணமாய் வாழ எண்ணம்போல் அமையும்

முதலாளி தொழிலாளி வர்க்கம்
முனைப்போடு வாழ்விற்கு வெளிச்சம்
கடின உழைப்பே கடவுள் வரம்
துரிதமாகணும் தூரத்து விடியல்

மேதினம் வந்தது மேன்மைகள் பெற்றது
யாதினும் வர்க்கம் யாபேரும் ஒற்றுமை
வியர்வையின் துளியிலே விளைந்தது ஒருநாள்
விடுதலை கிடைத்தது மேதினம் ஒன்றில்

வியர்வை சிந்தி உழைத்த வர்க்கம்
விடுதலை ஒன்றைப் பெற்றிட்ட மகிழ்வு
போற்றிடும் நாளாய் மே ஒன்று
தொழிலாளர் உயர வழிசமைத்த திருநாள்

நகுலா சிவநாதன்1805

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading