நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன்
உழைப்பே உயர்வு

உழைப்பின் மேன்மை உயர்வு தருமே
பிழைப்புக்கு அதுவே பெருமை யாகும்
வாழ்க்கைக்கு வேண்டும் வளமான உழைப்பு
வண்ணமாய் வாழ எண்ணம்போல் அமையும்

முதலாளி தொழிலாளி வர்க்கம்
முனைப்போடு வாழ்விற்கு வெளிச்சம்
கடின உழைப்பே கடவுள் வரம்
துரிதமாகணும் தூரத்து விடியல்

மேதினம் வந்தது மேன்மைகள் பெற்றது
யாதினும் வர்க்கம் யாபேரும் ஒற்றுமை
வியர்வையின் துளியிலே விளைந்தது ஒருநாள்
விடுதலை கிடைத்தது மேதினம் ஒன்றில்

வியர்வை சிந்தி உழைத்த வர்க்கம்
விடுதலை ஒன்றைப் பெற்றிட்ட மகிழ்வு
போற்றிடும் நாளாய் மே ஒன்று
தொழிலாளர் உயர வழிசமைத்த திருநாள்

நகுலா சிவநாதன்1805

Nada Mohan
Author: Nada Mohan