” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன்
உழைப்பே உயர்வு

உழைப்பின் மேன்மை உயர்வு தருமே
பிழைப்புக்கு அதுவே பெருமை யாகும்
வாழ்க்கைக்கு வேண்டும் வளமான உழைப்பு
வண்ணமாய் வாழ எண்ணம்போல் அமையும்

முதலாளி தொழிலாளி வர்க்கம்
முனைப்போடு வாழ்விற்கு வெளிச்சம்
கடின உழைப்பே கடவுள் வரம்
துரிதமாகணும் தூரத்து விடியல்

மேதினம் வந்தது மேன்மைகள் பெற்றது
யாதினும் வர்க்கம் யாபேரும் ஒற்றுமை
வியர்வையின் துளியிலே விளைந்தது ஒருநாள்
விடுதலை கிடைத்தது மேதினம் ஒன்றில்

வியர்வை சிந்தி உழைத்த வர்க்கம்
விடுதலை ஒன்றைப் பெற்றிட்ட மகிழ்வு
போற்றிடும் நாளாய் மே ஒன்று
தொழிலாளர் உயர வழிசமைத்த திருநாள்

நகுலா சிவநாதன்1805

Nada Mohan
Author: Nada Mohan