எண்ணங்கள் ஆயிரம்..

சிவதர்சனி இரா
வியாழன் கவிதை

எண்ணங்கள் ஆயிரம்..2137

ஏணியென ஏற்றிடும் சில வகை
எளிமையாய் வீழ்த்திடும் பலவகை
எண்ணத்தின் சிதறல்கள் புதுவகை
என்றும் உயர்வினை நாடுதல் உவகை

இறக்கை விரித்து பறக்குமாம்
இனிக்கும் சேதி சொல்லி திரியும்
இறக்கும் வரையில் துயரம் மறக்கும்
இனி என்ன வாழ்வே சிறக்கும்..

குட்டிப்புன்னகை குழவிபோல் விரி
குவலயம் தழைக்க சேவை புரி
இருப்பது குறுகிய காலம் சிரி
குன்றென தலை நிமிர கவி வரி..
சிவதர்சனி இராகவன்
10/4/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading