என்னழகுச் சித்திரமே

நகுலா சிவநாதன்

என்னழகுச் சித்திரமே

சிங்காரப் பெண்ணவளே!
சிந்தனையின் கருவூலமே
மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி
கன்னக் குழியிரண்டும் காந்தக் கருவிழியால்
என்னைக் கவருதடி ஏந்திழையே உன்னழகு

புத்தம் புதிய எண்ணங்கள்
புதிதாய் கூடி மலர்ந்திடவே
நித்தம் பூக்கும் மலர்களாக
நிறைவாய் முயற்சி பெருகிடுமே
முத்து வைர மணிகளாக
முகிழ்க்கும் நல்ல விளையாட்டும்
வித்தாய் வெற்றி பெற்றிடவே
விரைவாய் ஓடிய சித்திரமே!

நகுலா சிவநாதன்1809

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading