” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

என்னழகுச் சித்திரமே

நகுலா சிவநாதன்

என்னழகுச் சித்திரமே

சிங்காரப் பெண்ணவளே!
சிந்தனையின் கருவூலமே
மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி
கன்னக் குழியிரண்டும் காந்தக் கருவிழியால்
என்னைக் கவருதடி ஏந்திழையே உன்னழகு

புத்தம் புதிய எண்ணங்கள்
புதிதாய் கூடி மலர்ந்திடவே
நித்தம் பூக்கும் மலர்களாக
நிறைவாய் முயற்சி பெருகிடுமே
முத்து வைர மணிகளாக
முகிழ்க்கும் நல்ல விளையாட்டும்
வித்தாய் வெற்றி பெற்றிடவே
விரைவாய் ஓடிய சித்திரமே!

நகுலா சிவநாதன்1809

Nada Mohan
Author: Nada Mohan