ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

எல்லாளன்

இல்லறத்தில் பருவத்தில் இணைந்த போதும்
இல்லாத பிள்ளை குறை
இணைந்த போதும்
சொல்லரிய வளம் இல்லா
சோகத்தூடும்
மெல்லென்ற சிரிப்பை என்
மேனி தூவும்.

வயதான பிள்ளைகளில்
வாழ்வை மேலும்
வளமாக்கி வாழ்விக்க
ஆர்வம் சீறும்
புயலாக பெரு நோய்கள்
பொருதி நாளும்்
போட்டுடலை வாட்டும் எந்த
பொழு தென்றாலும்
சுயமாக குடும்பத்தை சுமந்து தேற்றும்
சுந்தர நல் மனையாளின்
ஆற்ற லாலே
பயனாக வாழ்கின்றோம் பலரும் போற்ற.

எங்கெதிலே குறை இல்லை
எவர்க்கும் தொல்லை
இடர் பாடு ஒப்பீட்டில்
போதா எண்ணம்
தங்களது வருவாய்க்கு
தகுந்தால்போல
தம் தேவை சுருக்குவதே
தகுந்த வாழ்வு
எங்கும் உண்டு ஏற்ற இறக்கம்
இருப்பு போதும்்
என்று மனம் எண்ண
எம்மில் சிரிப்பு தாவும்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan