கடந்து போகும் காலநதி…

அட்சரமாய் ஆதரவாய் தொடருந்தாய் தொடர்வது
அனுதினமும் கடலலைபோல் ஒய்வற்று நகர்வது
ஓங்கார நாதமாய் உள்ளார்ந்த உணர்விது
ஒற்றை நொடிப்பொழுதிற்கும் ஒற்றுமையாய் மிளிர்வது
எண்ணற்ற செயல்களுக்கும் எண்ணிக்கைக் பதிவிது
ஏற்றத்திற்கும் தோற்றத்திற்கும்
ஏணியாகி நிமிர்வது
வற்றாத பொழுதிற்கும் வரைமுறை வகுப்பது
வருங்கால பட்டறிவை
வகுத்தறியும் வானமாய்
நிகழ்கால நிஜத்தையே
நின்றுரைக்கும் நிதானமாய்
கடந்து போன காலநதி கண்முன்னே காலிக்கும்
கடக்கும் வலிப்பாதையில்
காலமகள் விவாதிக்கும்.
கலங்கரையாய் தண்மதியாய்
காலமெனும் தோழன்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முனைதலே ஞானம்!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading