கணப்பொழுதில்..64

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
19-06-2025

வானில் பறந்ததொரு அழகிய பறவை
வண்ணக்கனவுடன் வலம் வந்தோருடன்
தீப்பிழம்பாகி கணப்பொழுதில்
திசையெல்லாம் சிதறி தரையில் வீழ

காத்திருந்தவர்களின் கலக்கமொருபக்கம்
காலனிடம் அகப்பட்டோர் மறுபக்கம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததேது
காற்றோடு கலந்த காலத்தின் சாபமா?

விண்ணிலே தெரியவே கரும்புகை மேகம்
வீழ்ந்ததே மண்ணிலே பெரும் சோகம்
மருத்துவ மாணவர்க்கு நடந்த கதி
மனத்தையே உலுக்கிய மறு ஓலமிது

பட்டாம் பூச்சியாய் பறந்தவர்கள்
பல கனவோடு மிதந்தவர்கள்
கணப்பொழுதில் கலங்க வைத்து
காற்றோடு காவியமாகினரே!

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading