நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கணப்பொழுதில்..64

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
19-06-2025

வானில் பறந்ததொரு அழகிய பறவை
வண்ணக்கனவுடன் வலம் வந்தோருடன்
தீப்பிழம்பாகி கணப்பொழுதில்
திசையெல்லாம் சிதறி தரையில் வீழ

காத்திருந்தவர்களின் கலக்கமொருபக்கம்
காலனிடம் அகப்பட்டோர் மறுபக்கம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததேது
காற்றோடு கலந்த காலத்தின் சாபமா?

விண்ணிலே தெரியவே கரும்புகை மேகம்
வீழ்ந்ததே மண்ணிலே பெரும் சோகம்
மருத்துவ மாணவர்க்கு நடந்த கதி
மனத்தையே உலுக்கிய மறு ஓலமிது

பட்டாம் பூச்சியாய் பறந்தவர்கள்
பல கனவோடு மிதந்தவர்கள்
கணப்பொழுதில் கலங்க வைத்து
காற்றோடு காவியமாகினரே!

Jeba Sri
Author: Jeba Sri