இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கணப்பொழுதில்..64

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
19-06-2025

வானில் பறந்ததொரு அழகிய பறவை
வண்ணக்கனவுடன் வலம் வந்தோருடன்
தீப்பிழம்பாகி கணப்பொழுதில்
திசையெல்லாம் சிதறி தரையில் வீழ

காத்திருந்தவர்களின் கலக்கமொருபக்கம்
காலனிடம் அகப்பட்டோர் மறுபக்கம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததேது
காற்றோடு கலந்த காலத்தின் சாபமா?

விண்ணிலே தெரியவே கரும்புகை மேகம்
வீழ்ந்ததே மண்ணிலே பெரும் சோகம்
மருத்துவ மாணவர்க்கு நடந்த கதி
மனத்தையே உலுக்கிய மறு ஓலமிது

பட்டாம் பூச்சியாய் பறந்தவர்கள்
பல கனவோடு மிதந்தவர்கள்
கணப்பொழுதில் கலங்க வைத்து
காற்றோடு காவியமாகினரே!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading