கமலா ஜெயபாலன்

மங்கை மலரே
————-/———-
தாய்க்கு மகளாய்
தரணியில் பிறந்து
சேய்க்கு அம்மாவாய்
சிறப்புடன் வாழ்ந்து
தரணி சிறக்க
தாரமும் போற்றி
பரணி எங்கும்
பாசமலரய் மலர்ந்து
குணத்தில் குண்றாய்
குவலயம் காத்து
மணமும் பரப்பும்
மங்கை பெண்ணே/
அவளின்றி அணுவும்
அசையாது என்று
தவழும் குழந்தை
தானும் அறியும்/
வீரம் கொண்டு
வேங்கையாய் எழுவாள்
பாரமாய் எதையும்
பார்த்திட மாட்டாள்
வேதனை வந்தால்
விரட்டுவாள் காளியாய்
சாதனை புரிவாள்
சரித்திரம் படைப்பாள்
வாழ்க மகளிர்
வாழ்த்துவோம் வாரீர்
வாழ்க வாழ்க
வையகம் போற்றவே/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading