கனவுப் பயணம் 761 07.05.2026

செல்வி நித்தியானந்தன் கனவுப் பயணம் அகமதில் நிறைவு கண்டு ஆனந்தமாய் சுற்றி வந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து ஆச்சரிய பயணமாய் நிறைவு நாளும் வாரமும் மாதமாகி நல்லவை கெட்டவை சேர்வாகி நானும்துணையோடு இணைவாகி நல்பொழுதுவிடியலும்...

Continue reading

அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கமலா ஜெயபாலன்

மங்கை மலரே
————-/———-
தாய்க்கு மகளாய்
தரணியில் பிறந்து
சேய்க்கு அம்மாவாய்
சிறப்புடன் வாழ்ந்து
தரணி சிறக்க
தாரமும் போற்றி
பரணி எங்கும்
பாசமலரய் மலர்ந்து
குணத்தில் குண்றாய்
குவலயம் காத்து
மணமும் பரப்பும்
மங்கை பெண்ணே/
அவளின்றி அணுவும்
அசையாது என்று
தவழும் குழந்தை
தானும் அறியும்/
வீரம் கொண்டு
வேங்கையாய் எழுவாள்
பாரமாய் எதையும்
பார்த்திட மாட்டாள்
வேதனை வந்தால்
விரட்டுவாள் காளியாய்
சாதனை புரிவாள்
சரித்திரம் படைப்பாள்
வாழ்க மகளிர்
வாழ்த்துவோம் வாரீர்
வாழ்க வாழ்க
வையகம் போற்றவே/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading