நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மங்கை மலரே
————-/———-
தாய்க்கு மகளாய்
தரணியில் பிறந்து
சேய்க்கு அம்மாவாய்
சிறப்புடன் வாழ்ந்து
தரணி சிறக்க
தாரமும் போற்றி
பரணி எங்கும்
பாசமலரய் மலர்ந்து
குணத்தில் குண்றாய்
குவலயம் காத்து
மணமும் பரப்பும்
மங்கை பெண்ணே/
அவளின்றி அணுவும்
அசையாது என்று
தவழும் குழந்தை
தானும் அறியும்/
வீரம் கொண்டு
வேங்கையாய் எழுவாள்
பாரமாய் எதையும்
பார்த்திட மாட்டாள்
வேதனை வந்தால்
விரட்டுவாள் காளியாய்
சாதனை புரிவாள்
சரித்திரம் படைப்பாள்
வாழ்க மகளிர்
வாழ்த்துவோம் வாரீர்
வாழ்க வாழ்க
வையகம் போற்றவே/

Nada Mohan
Author: Nada Mohan