அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

எண்ணம்
இனிக்கும் நினைவுகள் எண்ணத்தில் ஓடும்
கனிந்து மனதில் கரைந்து பாயும்

தந்தையும் தாயும் தந்த பாசமும்
எந்தை நாடும் எழிலான காட்சிகளும்

அண்ணன் அக்கா அனைத்த உறவும்
கண்ணில் நீராகி கவலைக்குள் தள்ளும்

மண்ணில் வீடுகட்டி மகிந்த காலங்கள்
எண்ணத்தில் இருத்தி இழந்தவை போக

இருப்பவை எண்ணி இதயம் நிறைந்து
வருபவை எல்லாம் வளமாய் குவிய

நல்ல மனிதராய் நானிலம் போற்ற
இல்லை என்று எதுவும் வேண்டாம்

இதுவே போதும் இறைவன் தந்தது
அதுவே விதியென ஆறுதல் அடைவோம்

Nada Mohan
Author: Nada Mohan