” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

எண்ணம்
இனிக்கும் நினைவுகள் எண்ணத்தில் ஓடும்
கனிந்து மனதில் கரைந்து பாயும்

தந்தையும் தாயும் தந்த பாசமும்
எந்தை நாடும் எழிலான காட்சிகளும்

அண்ணன் அக்கா அனைத்த உறவும்
கண்ணில் நீராகி கவலைக்குள் தள்ளும்

மண்ணில் வீடுகட்டி மகிந்த காலங்கள்
எண்ணத்தில் இருத்தி இழந்தவை போக

இருப்பவை எண்ணி இதயம் நிறைந்து
வருபவை எல்லாம் வளமாய் குவிய

நல்ல மனிதராய் நானிலம் போற்ற
இல்லை என்று எதுவும் வேண்டாம்

இதுவே போதும் இறைவன் தந்தது
அதுவே விதியென ஆறுதல் அடைவோம்

Nada Mohan
Author: Nada Mohan