கலைந்து போன கனவுகள் 11.09.2025

விண்ணவன் – குமுழமுனை.

எத்தனை எத்தனையோ
கனவுகள் கண்டவேளேதனிலே

கனவுகளோ கைகூடி
வருவது போன்றே
தோன்றிய வேளையது தனிலே

கண்ணிமைக்கும்
நொடிதனிலே கண்ட
கனவுகள் அனைத்துமே
கைநழுவி சென்றதேனோ

கனவுகள் வெறும்
கனவாய் ஆனதை
நினைத்தே

இருவிழி நீரினிலே
மூழ்கியே தத்தளித்து
துடித்து இதயமோ
துண்டாய் உடைந்ததே

இந் நிலையோ – அதை
கூற வார்த்தையேதுமில்லையே
என்னிடத்திலே….

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading