கலைந்து போன கனவுகள் 11.09.2025

விண்ணவன் – குமுழமுனை.

எத்தனை எத்தனையோ
கனவுகள் கண்டவேளேதனிலே

கனவுகளோ கைகூடி
வருவது போன்றே
தோன்றிய வேளையது தனிலே

கண்ணிமைக்கும்
நொடிதனிலே கண்ட
கனவுகள் அனைத்துமே
கைநழுவி சென்றதேனோ

கனவுகள் வெறும்
கனவாய் ஆனதை
நினைத்தே

இருவிழி நீரினிலே
மூழ்கியே தத்தளித்து
துடித்து இதயமோ
துண்டாய் உடைந்ததே

இந் நிலையோ – அதை
கூற வார்த்தையேதுமில்லையே
என்னிடத்திலே….

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading