நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கலைந்து போன கனவுகள் 11.09.2025

விண்ணவன் – குமுழமுனை.

எத்தனை எத்தனையோ
கனவுகள் கண்டவேளேதனிலே

கனவுகளோ கைகூடி
வருவது போன்றே
தோன்றிய வேளையது தனிலே

கண்ணிமைக்கும்
நொடிதனிலே கண்ட
கனவுகள் அனைத்துமே
கைநழுவி சென்றதேனோ

கனவுகள் வெறும்
கனவாய் ஆனதை
நினைத்தே

இருவிழி நீரினிலே
மூழ்கியே தத்தளித்து
துடித்து இதயமோ
துண்டாய் உடைந்ததே

இந் நிலையோ – அதை
கூற வார்த்தையேதுமில்லையே
என்னிடத்திலே….

Nada Mohan
Author: Nada Mohan