“கான மயில்”

சிவாஜினி சிறிதரன்
இலக்கம்_191
“கான மயில்”

அழகான கொண்டை
நீண்டதோர் தோகை
கொத்தி உணவை உண்வாய்
கத்தி கத்தி வருவாய்!

நெல்வயல் தேடி
நம்மை நாடி
பறந்து வந்தாய்
உன் அழகை பாத்து மயங்கி நின்றேன்!

கானமயிலே
வரையறை மீறி ஆடுகின்றாய் உன் அழகை மிஞ்ச யார்
உனக்கு நிகர் ஏது கோலமயிலே!

நீ இட்ட முட்டை கோழி அடை காத்து குஞ்சு பொரித்து
இறகு முளைக்க எனை விட்டு இனத்தை தேடி பிரிந்து சென்றாய்!

என் கனவும் கரைந்து போனது
வயல் வெளியும் இல்லை
காடும் இல்லை
அழிவின் விழிம்பில் கானமயில் கூட்டம் !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading