18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
கார்த்திகையாள்….
ரஜனி அன்ரன்
“ கார்த்திகையாள் “…கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.11.2024
காலநகர்வில் கங்குல் பொழுதில்
கார்த்திகையாளின் மலர்வு
கண்களுக்கு குளிர்வு
வானில் நிலா மின்னி ஒளிர
வான்மேகம் பூமழை தூவ
வண்ண நிலவாக ஒளிவீச
வந்து விட்டாள் கார்த்திகையாள் !
திருக்கார்த்திகைத் தீபத் திருநாளும்
சோமவாரத் திங்களும் அலங்காரமாக
சக்தியும் பக்தியும் இணைந்திட
தீபமேற்றிக் கோலம் போட்டு
அகல் விளக்குகள் ஜோதியாகி
ஆரவாரமாய் அகிலமே ஒளிவீச
ஆனந்தமாய் வந்துவிட்டாள் கார்த்திகையாளும் !
கார்த்திகையாளின் வரவு
காந்தளுக்கு மகிழ்வு
மாந்தருக்கோ மனநெகிழ்வு
காந்தள்களும் கலகலவெனப் பூத்துக் குலுங்கிட
மாந்தர்களும் மறவர்களை நினைத்துக் கலங்கிட
வந்துவிட்டாள் கார்காலக் கார்த்திகையாள்
கண்மணிகளை ஒளியேற்றித் துதித்திடவே !
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...