” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கார்த்திகையாள்….

ரஜனி அன்ரன்

“ கார்த்திகையாள் “…கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.11.2024

காலநகர்வில் கங்குல் பொழுதில்
கார்த்திகையாளின் மலர்வு
கண்களுக்கு குளிர்வு
வானில் நிலா மின்னி ஒளிர
வான்மேகம் பூமழை தூவ
வண்ண நிலவாக ஒளிவீச
வந்து விட்டாள் கார்த்திகையாள் !

திருக்கார்த்திகைத் தீபத் திருநாளும்
சோமவாரத் திங்களும் அலங்காரமாக
சக்தியும் பக்தியும் இணைந்திட
தீபமேற்றிக் கோலம் போட்டு
அகல் விளக்குகள் ஜோதியாகி
ஆரவாரமாய் அகிலமே ஒளிவீச
ஆனந்தமாய் வந்துவிட்டாள் கார்த்திகையாளும் !

கார்த்திகையாளின் வரவு
காந்தளுக்கு மகிழ்வு
மாந்தருக்கோ மனநெகிழ்வு
காந்தள்களும் கலகலவெனப் பூத்துக் குலுங்கிட
மாந்தர்களும் மறவர்களை நினைத்துக் கலங்கிட
வந்துவிட்டாள் கார்காலக் கார்த்திகையாள்
கண்மணிகளை ஒளியேற்றித் துதித்திடவே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading