சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கார்த்திகையாள்….

ரஜனி அன்ரன்

“ கார்த்திகையாள் “…கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.11.2024

காலநகர்வில் கங்குல் பொழுதில்
கார்த்திகையாளின் மலர்வு
கண்களுக்கு குளிர்வு
வானில் நிலா மின்னி ஒளிர
வான்மேகம் பூமழை தூவ
வண்ண நிலவாக ஒளிவீச
வந்து விட்டாள் கார்த்திகையாள் !

திருக்கார்த்திகைத் தீபத் திருநாளும்
சோமவாரத் திங்களும் அலங்காரமாக
சக்தியும் பக்தியும் இணைந்திட
தீபமேற்றிக் கோலம் போட்டு
அகல் விளக்குகள் ஜோதியாகி
ஆரவாரமாய் அகிலமே ஒளிவீச
ஆனந்தமாய் வந்துவிட்டாள் கார்த்திகையாளும் !

கார்த்திகையாளின் வரவு
காந்தளுக்கு மகிழ்வு
மாந்தருக்கோ மனநெகிழ்வு
காந்தள்களும் கலகலவெனப் பூத்துக் குலுங்கிட
மாந்தர்களும் மறவர்களை நினைத்துக் கலங்கிட
வந்துவிட்டாள் கார்காலக் கார்த்திகையாள்
கண்மணிகளை ஒளியேற்றித் துதித்திடவே !

Nada Mohan
Author: Nada Mohan