“காலம் போற போக்கைப் பாரு”

நேவிஸ் பிலிப் கவி இல(461)

காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக் கம்பியென
வளைந்தோடும் ஆறு
அள்ளிப் பருகிய நன் நீர்

பறவை கண்டார்
விமானம் படைத்தார்
நவீன வளர்ச்சியென
இயந்திரப் பறவைகளை தாராளமாய்
மாண்டோரோ அதில் ஏராளமாய்

ஒன்றே குலமென வாழ மறந்து
ஆடிய ஆட்டமென்ன
தேடிய தேட்டமென்ன
ஈட்டிய செல்வமென்ன
கட்டிய மாடங்களெல்லாம்
இன்று நொடிப் பொழுதில்
கல்லாய் மண்ணாய்
உலகம் போற போக்கைப் பாரு,,,,,,,
நன்றி…….

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading