நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

“காலம் போற போக்கைப் பாரு”

நேவிஸ் பிலிப் கவி இல(461)

காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக் கம்பியென
வளைந்தோடும் ஆறு
அள்ளிப் பருகிய நன் நீர்

பறவை கண்டார்
விமானம் படைத்தார்
நவீன வளர்ச்சியென
இயந்திரப் பறவைகளை தாராளமாய்
மாண்டோரோ அதில் ஏராளமாய்

ஒன்றே குலமென வாழ மறந்து
ஆடிய ஆட்டமென்ன
தேடிய தேட்டமென்ன
ஈட்டிய செல்வமென்ன
கட்டிய மாடங்களெல்லாம்
இன்று நொடிப் பொழுதில்
கல்லாய் மண்ணாய்
உலகம் போற போக்கைப் பாரு,,,,,,,
நன்றி…….

Nada Mohan
Author: Nada Mohan