“காலம் போற போக்கைப் பாரு”

நேவிஸ் பிலிப் கவி இல(461)

காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக் கம்பியென
வளைந்தோடும் ஆறு
அள்ளிப் பருகிய நன் நீர்

பறவை கண்டார்
விமானம் படைத்தார்
நவீன வளர்ச்சியென
இயந்திரப் பறவைகளை தாராளமாய்
மாண்டோரோ அதில் ஏராளமாய்

ஒன்றே குலமென வாழ மறந்து
ஆடிய ஆட்டமென்ன
தேடிய தேட்டமென்ன
ஈட்டிய செல்வமென்ன
கட்டிய மாடங்களெல்லாம்
இன்று நொடிப் பொழுதில்
கல்லாய் மண்ணாய்
உலகம் போற போக்கைப் பாரு,,,,,,,
நன்றி…….

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading