“காலம் போற போக்கைப் பாரு”

நேவிஸ் பிலிப் கவி இல(461)

காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக் கம்பியென
வளைந்தோடும் ஆறு
அள்ளிப் பருகிய நன் நீர்

பறவை கண்டார்
விமானம் படைத்தார்
நவீன வளர்ச்சியென
இயந்திரப் பறவைகளை தாராளமாய்
மாண்டோரோ அதில் ஏராளமாய்

ஒன்றே குலமென வாழ மறந்து
ஆடிய ஆட்டமென்ன
தேடிய தேட்டமென்ன
ஈட்டிய செல்வமென்ன
கட்டிய மாடங்களெல்லாம்
இன்று நொடிப் பொழுதில்
கல்லாய் மண்ணாய்
உலகம் போற போக்கைப் பாரு,,,,,,,
நன்றி…….

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading