கீத்தா பரமானந்தன்

நிலாவில் உலா!

கொஞ்சிவரும் ஒளியாகக்
கோலமிடும் உறவாக
நெஞ்சமதை நிறைவாக்கும்
நித்திலத்தின் கனவே!
விஞ்சுகின்ற காதலுக்கே
விரைந்திடுவாய் தூதாக
மஞ்சமிட்டே நிறைகின்றாய்
மதியொளியே எமக்காக!

சொந்தமெனச் சுற்றுகிறேன்
சொக்கியுமே இரசிக்கின்றேன்!
அந்தியதன் துணையாக
அஞ்சுதலைப் போக்குகிறாய்
சிந்தையது இனித்திடவே
சிந்துகின்றாய் கவியாகி
வந்தனையாம் வான்நிலவே
வாஞ்சையுள்ள பேரெளிலே!

கற்பனை கடந்திட்ட
கந்தர்வ எழிலே
விஞ்ஞானம் மெஞ்ஞானம்
எல்லாமும் இன்பமுடன்
நிலாவே உன்னுடனே உலா!

கீத்தா பரமானந்தன்18-12-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading