நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து உயிர் வதை தொடுக்கும்

அத்தனை பக்கமும் மாசு படுத்திடும் செயல்கள்
தொடுப்பவர் நாமே பூமிப்பந்துள் வினைத்திறனாக்கி
விளைச்சலை அழித்து வினையை வளர்த்து
அனுதின்ம் அணுக்களுள் புளுக்களாய் நுளைவோம்

போரும் வதையும் போக்கிடம் இன்றி
கந்தகப் புகைக்குள் கருகிடும் நிலையும்
சூழலைத் துவம்சம் செய்திடும் சோதனை
அழிவை எழுதிடும் ஆக்கச்செய்வினை

நாளைய உலகு தலைமுறை எழுத
நயந்து கொடுப்பது மாசும் தூணும்
விழித்து எழுந்துமுனைப்பொடு விளைந்துமாற்றத்தெறிப்பில் மறுமலர்ச்சியைத் தொடலாம்

Author: