மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து உயிர் வதை தொடுக்கும்

அத்தனை பக்கமும் மாசு படுத்திடும் செயல்கள்
தொடுப்பவர் நாமே பூமிப்பந்துள் வினைத்திறனாக்கி
விளைச்சலை அழித்து வினையை வளர்த்து
அனுதின்ம் அணுக்களுள் புளுக்களாய் நுளைவோம்

போரும் வதையும் போக்கிடம் இன்றி
கந்தகப் புகைக்குள் கருகிடும் நிலையும்
சூழலைத் துவம்சம் செய்திடும் சோதனை
அழிவை எழுதிடும் ஆக்கச்செய்வினை

நாளைய உலகு தலைமுறை எழுத
நயந்து கொடுப்பது மாசும் தூணும்
விழித்து எழுந்துமுனைப்பொடு விளைந்துமாற்றத்தெறிப்பில் மறுமலர்ச்சியைத் தொடலாம்

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading