“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு”

நேவிஸ் பிலிப் கவி இல (589)

விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை புசித்து
சுத்த காற்றை சுகமாய் சுவாசித்து
மாசற்ற உலகினிலே நோயற்று
வாழ்நதனர்நம் முன்னோர்

காலம் மாறியது சுகாதார வாழ்விற்கு
சுத்தமே மூலம் தூய்மையே பாலம்
என்பதை மறந்த மனிதர்
ஐம்பூதங்களை சீரழிக்க

பசுமை நிறைந்த மரங்கள்அழிய
பருவ மழை பொய்க்க
வரட்சி எங்கும் நிலவ
மாசில்லா காற்றுக்காய்
உயிரினங்கள் ஏங்க

கழிவு நீர்த் தேக்கங்களில்
கிருமிகள் வாழ
பெருகி வரும் வாகனங்கள்
நச்சுப் புகை உமிழ

ஆகாயவெளி எங்கும் கரும்புகை
போரின் அவலம்
எங்கும் அசுத்தம்
நோயின் தாக்கம்

மரணத்தின் விளிம்பில்
மக்களின் ஓலம்
மாசற்ற உலகுக்கும்
நோயற்ற வாழ்வுக்கும்
ஏங்குது உலகு
நன்றி………

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading