சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு”

நேவிஸ் பிலிப் கவி இல (589)

விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை புசித்து
சுத்த காற்றை சுகமாய் சுவாசித்து
மாசற்ற உலகினிலே நோயற்று
வாழ்நதனர்நம் முன்னோர்

காலம் மாறியது சுகாதார வாழ்விற்கு
சுத்தமே மூலம் தூய்மையே பாலம்
என்பதை மறந்த மனிதர்
ஐம்பூதங்களை சீரழிக்க

பசுமை நிறைந்த மரங்கள்அழிய
பருவ மழை பொய்க்க
வரட்சி எங்கும் நிலவ
மாசில்லா காற்றுக்காய்
உயிரினங்கள் ஏங்க

கழிவு நீர்த் தேக்கங்களில்
கிருமிகள் வாழ
பெருகி வரும் வாகனங்கள்
நச்சுப் புகை உமிழ

ஆகாயவெளி எங்கும் கரும்புகை
போரின் அவலம்
எங்கும் அசுத்தம்
நோயின் தாக்கம்

மரணத்தின் விளிம்பில்
மக்களின் ஓலம்
மாசற்ற உலகுக்கும்
நோயற்ற வாழ்வுக்கும்
ஏங்குது உலகு
நன்றி………

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading