கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
மாவீர்ரே
———

தமிழர் மனதில் தடம் பதித்த
தங்க மணிகளே
தாரக மந்திரம் தமிழ்ஈழம்
தங்கவைக்க பாடுபட்டீரே
எங்கள் மண்மீட்புக்காய்
உங்கள் இன்னுயிர் ஈந்தவரே
தங்கள் பெருமை கூற
தரணியில் தமிழர் உண்டு காண்பீரோ
மன்னாதி மன்னரும் படை கொண்டு
வெல்ல
பொன்னான உம் கரத்தினால்
ஆயுதம் ஏந்தி வெல்ல
தன்மானம் காத்த வீர்ரன்றோ
தந்தை தாய் அரவணைப்பு இழந்தவரன்றோ
அன்னமின்றி தண்ணியின்றி
நடந்த கால் துவள
நித்திரை இன்றி நிம்மதி இன்றி
எடுத்த காரியம் முடிக்க
அயராது உழைத்தவரே
ஆத்ம அஞ்சலிகள்
அள்ளி மலரால் அர்ச்சிக்கின்றோம்
மாவீர்ரே உங்களையே
கெங்கா ஸ்ரான்லி
29.10.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading