கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

துளிநீர்

துளித்துளியாய் பெய்யும் மழை
தொடராய் பெய்யும் விடாதா மழை.
கடளினுள் கலக்கும் மழைத்துளி
கன மழையாவதும் துளிநீரே.

ஒழுகும் நீரை ஓடவிட்டு
கழுவும் வரை திறந்த நீரை,
கடகட வென ஓடினாலும்
நிறுத்த தோன்றா மனித இனம்.

நீரின் பெறுமதி தெரியவில்லை
நீரின்றி போனால் வாழ்வுமில்லை.
காரின்றி இருந்தால் மழையுமில்லை
காய்ந்து விட்ட நிலத்திற்கு ஒரு துளிநீர் இல்லை.

நீருக்கும் உண்டு பலவகைக் குணங்கள்
நீரும் மூன்றுமுறை பிழை பொறுக்கும்.
வேருக்கும் கொடுத்த துளிநீர் கூட
விருட்சமாக்கும் ஆலமரத்தை போல.

துளீநீர் என்று வீணாக்காது
துளி நீர் சேகரித்துக் குடத்தில்
தளிர்விடும் குருத்தை காப்பதுபோல்.
வளம் பெற சுய வாழ்வுக்கு
துளிர் நீர் அவசியமென்று உணர்க.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading