வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

உழைப்பாழர்

வயலும் வயல் சார்ந்த நிலமும்
மருதம் மக்களின் மகிழல்.
வயல் விதைத்தால் தான்
வயிறு நிறையும்.
வயிறு நிறைந்தால் தான்
மனதும் மகிழும்.
உடலும் ஆரோக்கியமாகும்.
இவ்வளவும் நடக்க
உழைப்பாளி தேவை.
யாரவர் எனில் விவசாயி.
சங்க கால இலக்கியங்கள்
உழவன் பற்றி உன்னதமாக சொல்லின.
இன்று அவர் நிலை கேள்விக் குறியாகின.
உலக நாடுகள் உழைப்பாளர்
தினம் கொண்டாட,
உழைப்பின்றி வாடும் மனிதர்
தான் மனம் சோர்ந்திட,
உழைக்கும் தொழிலாளர்
அடிமைத் தனமே.
உரிமைகள் கோரிடும்
வெறித் தனமே.
கால நேரம் பாராத
கடின உழைப்பாளி.
உடல் வலிமை யின்றி
உமையாக நீங்கள்
முறையான கூலிபெற்றிடா
முழுநாளும் மாடாய் உழைக்கும்
ஏழைத் தொழிலாளியின் பைவெறுமை
முதலாலி உடல் அசைக்காமல் பைமுழுமை.
கஷ்டமான வேலைகள்
தான் செய்யும் தொழிலாளி.
கண்ணீர் தான் கடைசியில்.
கவலையினால் துவண்டுவிடும்.
உழைப்பாளிகளை
மதியுங்கள்.
உழைப்புக் கேற்ற
ஊதியம் கொடுங்கள்
அவர் மனம் குளிர
வையுங்கள்
உங்கள் வாழ்வில்
மனித நேயம்
பேணுங்கள்.

கெங்கா ஸ்டான்லி.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading