கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ மாவீர்ரே”

மண்ணில் விளைந்த முத்துக்களே மாவீர்ரே!
மண்மாதா ஈன்றெடுத்த மாவீரச் சொந்தங்களே!
புண்பட்ட இதயங்கள் பண்பட்டு வளர்வதற்கே
கொண்ட கொள்கைகள் கடுகளவும் மாறாமல்

மண்மாதா விலங்குடைத்து மீட்க உயிர்கொடுத்தீர்
வண்டமிழ்ப் புதல்வராய் வீறுநடை போட்டீர்கள்
எண்ணத்தில் நம்பிக்கை எப்பொழுதும் தளராது
மண்பட்ட வேதனையை மலர்தூவி வணங்கவைத்து

கண்கட்டி வித்தையெல்லாம் காற்றோடு போகவிட்டு
மண்வாசனை நினைப்போடு மூச்சிழந்து போனீர்கள்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading