இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 230

தலையீடு

இறப்பு எப்படி நடந்தது?
இறந்தவர் யார்?
உறவு முறை என்ன?
யார் பொறுப்பு?
கேள்வி கொத்ததை
நிரப்பியவளுக்கு

உதவிகள் எங்காவது
பெறலாமா என்ற கேள்விக்கு
அனுதாபத்துடன் பதில் தந்தாள்

சவப்பெட்டி என்ன மாதிரியேன
கேள்வி வந்த போது
பார்வையிட்டவர்கள்
சப்புப் பலகை
ஊர் உலகம் ஏற்குமா?

எரிப்பதில் பெறுமதி
என்ன இருக்கின்றது
கேட்டவளுக்கு

அன்பைக் காட்ட
பெறுமதி தேவை!!..
தலையீட்டினால் தகர்ந்தது
அனுதாப அலைகள்!

தலையீடுகளால் தவிடுபொடியாகும்
காரியங்களில்
இதுவும் ஒன்று!!!!…….

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading