மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம்88

வேண்டும் வலிமை

பாரினிலே
நின்னையும்
பத்து திங்கள்
காத்திருந்து
பெற்றோமடா

பாவம் எதுவும்
செய்யவில்லை நீ
பாதகமாய்
காலம் செய்தது

குறைகளுக்கும்
தீர்வு
அன்பு
காட்டும்
வழி

கோணல்களை
நேராக்குவோம்
குடிகொள்ளும்
நெஞ்சுரம்
கொண்டு

வாழும்
வரை
வாழ்ந்திடுவோம்
வலிமையை வேண்டுவோமடா !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading