ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

க. குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 251

காதலர்

காத்திரு கண்மணியே
காத்திரு
காலம் எல்லாம்
எனக்கா காத்திரு

கடமைக்கும்
கடல் அலைக்கும்
ஓய்வில்லை !
கடந்து செல்வோம்
ஒரு முகமாகவே
அது வரை
காத்திரு!

அருந்ததியா
காத்திரு
அகலிகையாக
காத்திரு

இராமராக நான்
இருக்கும் வரை
நீயும் சீதையாக
செறிந்த பட்டணத்தில்
காத்திரு!…

வேளை வரும்
என காத்திரு
விடியும் நமக்கும்
எனக் காத்திரு ,,,,,,!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading