தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

அன்பின் நண்பரே அன்றே அனுப்பியிருந்தேன்

உழைப்பாளி

உருண்டிடும் உலகினை உயர்த்திட
உழைத்திடும் உயர்ந்தவன் உழைப்பாளி
ஏறுடைக்கும் உழவர்தம் உழைப்பினால்
சோறுடைக்கும் மானிட வாழ்க்கையில்

உடம்புக்கு முதுகெலும்பே ஆதாரம்
உழைப்பாளியே நாட்டிற்கு முதுகெலும்பு
உகுத்திடுவார் செந்நீரை வேர்வையாய்
ஊற்றிடுவார் கண்ணீரை வாழ்வினிலே

உழைப்பினைச் சுரண்டிடும் வர்க்கம்
உழைப்பாளியின் மகிமை உணர்வதில்லை
உறிஞ்சிடும் உழைப்பின் உயர்வினை
உணர்ந்திட்டால் உழைப்பாளி உயர்ந்திடுவான்

அகிலத்தின் ஆரம்ப காலமுதல்
அழகுடனே மிளிர்ந்தின்று உயரும்வரை
அடிப்படை அத்திவாரமாய் உழைப்பாளியே
அவனின்றும் அதேபோல அடித்தளத்தில்

உழைப்பாளி வாழ்கவெனும் கூச்சலுடன்
உலகமெங்கும் பெரும் ஊர்வலங்கள்
உழைத்தவரின் வாழ்க்கையை உயர்த்த
உலகத்தோர் கரங்களெல்லாம் உயரட்டும்

மேதினம் என்பதோர் அடையாளமே
மேதினியில் உழைப்பாளி திண்டாட்டமே
மாற்றமொன்று கான்பதெல்லாம் மக்கள்
மனநிலையில் மாற்றமுண்டானால் மட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading