ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாசி
கனவெனும் காற்றில்
நினைவெனும் தேரில்
புனைகின்ற வரிகளில்
நனைகின்ற வேளையிது

காலமும் நேரமும்
கணிக்கின்ற நிகழ்வுகள்
கசக்கின்ற போதங்கு
கனக்கின்ற சுமைகளாய்

புலரும் பொழுதுகளில்
மலரும் எண்ணங்களுள்
சுழறும் கருத்துகளில்
மிளிரும் நிஜங்கள்

கவிழும் இருள்களைக்
களையும் விடியல்களாய்
கவியும் நிகழ்வுகளால்
கடக்கும் பொழுதுகளே !

மயக்கும் காட்சிகளாய்
மாயை நாடகத்தில்
மாறும் வேடங்களாய்
மனிதர்கள் நடிப்புகளே

தேவைகள் ஆயிரமாய்த்
தேடிடும் ஆசைகளில்
தோய்ந்திடும் மாந்தர்கள்
தோன்றிடும் உணர்வுகள்

அனுபவத் தேடலொன்றில்
ஆன்மீகப் பயணங்கள்
அனைத்தையும் புரிந்திட்டால்
அதுவன்றோ ஆன்மீகம்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan