முதன் முதலாக

செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக

வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்

மகவினை கைஏந்தி
மண்ணிலே இருட்டு
மனதிலே பயமும்
மன்றாட்டிய இறையை

நீண்டதொரு வரிசை
கண்டதொரு காட்சி
மீண்டும் இந்நிலையா
மீளமுடியா வலியும்

நடுசாமம் கால்கடுக்க
நண்பரின் உதவியுடன்
நாட்டைவிட்டு நானும்
நாடியே அண்ணனிடம்

அதிகாலை வண்டியில்
அங்கிருந்து கிளம்பி
அனுப்பி வைத்தும்
அனுபவமும் முதலாக

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading