ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

பாமுகத்தின் கவித் தோட்டத்திலே
பூச்சொரியும் கவிச் சந்தத்திலே
தேனுறும் இனியதோர் மாலையிலே
தெளிக்கின்றார் கவித் துளிகளையே

கவிப்பூக்கள் தொடுத்தொரு மாலை
கட்டிடும் பொன்னானதிந்த மாலையிலே
கற்கண்டின் தித்திப்பினை ஈந்திடும்
கவிச்சொந்தங்கள் மத்தியில் மயக்கமிது

அன்னைத் தமிழின் வனப்பினை
அழகாய்க் கூட்டி யாத்திடுகின்றார்
அன்புச் சொந்தங்கள் இத்தளத்தில்
அடியேனுக்கு வாய்த்ததொரு வாய்ப்பு

இனித்திடும் மொழியாம் எம்தமிழ்
இகத்தினில் இதுபோல் இன்னுமில்லை
ஈன்றதெம்நாடு இத்தகை கவிஞரை
இயற்றிடும் கவிதைகள் அற்புதமே

வாழிய அனைவரும் தமிழ்போல
வார்த்திடுங்கள் கவிதை வாழும்வரை
வான்புகழ் பெற்றிடுவாள் தமிழன்னை
வந்தனம் செய்வேன் உங்களனைவரையும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan