சக்தி சக்திதாசன்

சிற்சில பொழுதுகள் எனை
சிறை கொள்ளும் வேளைகள்
சிறப்புறு இயற்கையின் வனப்பு
சிந்தையை மயக்கிடும் மலைப்பு

விளைந்திடும் எண்ணங்கள் யாவும்
விதைத்திடும் நிலைகொள் விதைகள்
வியப்போடு நோக்கிடும் கணங்கள்
விந்தையாய் விரித்திடும் சிறகுகள்

துடித்தொரு சிசுவாய் புவியில்
துளிர்த்திடும் நாள் முதல் வாழ்வில்
துலங்கிடும் வகைகளை புரிந்திடா
துல்லிய உணர்வுகள் பற்பல அறிவேன்

நடித்தொரு பாத்திரம் எமக்காய்
நாடகம் எழுதிய இயக்குனன் யாரோ?
நாளும் , பொழுதும் நடப்பவை அனைத்தும்
நானறிந்திட்டேனானல் அது அதிசயமே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading