சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு -262- “நேரம்”கவிதையில் எழுவேன்
கவிதையில் வாழ்வேன்
கவிதையாய் மலர்வேன்
கவிதையுள் உறைவேன்

எனக்குள் கவிதைகள்
எப்படி விளைகின்றன ?
எனக்குள் தமிழை
எவர்தான் விதைத்தார் ?

தீராத கேள்விகளும்
கிடைக்காத விடைகளும்
இருந்திடும் மனதினுள்
இனித்திடும் கவிதைகள்

சமூகத்தின் நிகழ்வுகள்
சத்தமாய்க் கவிந்திடும்
சரித்திர நிகழ்வுகள்
வரிகளாய் முகிழ்த்திடும்

பார்வையின் கோணத்தில்
பதிவதெல்லாம் கவிதைகள்
பார்ப்பதும் கேட்பதும்
புரிந்திடும் கவிதைகளாய்

வரலாற்று நாயகர்கள்
வடிவங்கள் கவிதைகளாய்
உணர்வின் பிரவாகம்
ஊறிடும் கவிதைகளாய்

இருப்பினும் கவிஞனல்ல
இயற்றுவது கவிதையுமல்ல
தானாய் விளையுது
தமிழாய்த் தவழுது

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading