சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பரவசம்!
தாரம் ஆனது பரவசம்
தாய்மை அடைந்தது பரவசம்
தங்கமகனை அள்ளி அணைத்து
தாய்ப்பால் ஊட்டியதும்
ஆனந்தப் பரவசத்தில்
துள்ளியது என்மனம்!
தித்திக்கும் முத்தம் தந்து
அரும்பு மொழிபேசி
குறும்பு சேட்டை செய்து
கவலைகள் மறக்கவைத்தவன்
என் உலகம் என உருவானவன்
கனவுகளின் கருவானவன் கவிதைக்குப் பொருளானவன்
தாய்மையே பெண்மைக்கு பரவசம்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading