ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள் முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார் நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம் வீதிவழி பார்த்திருக்காம் எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க காத்திருக்காம் நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

கவிதை தலைப்பு

சித்திரப் பதுமையல்ல

சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள்
முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார்
நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு
மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம்
வீதிவழி பார்த்திருக்காம்
எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க
காத்திருக்காம்

நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan