சித்திரமே வாராயோ……..

இரா.விஜயகௌரி
அஞ்சு வண்ண சித்தரமே
அழகான பேரொளியே
குஞ்சு மகள் உன் வரவை
கூடி நின்று தேடுகின்றோம்

கருவறையில் உன் நடனம்
களித்திருந்து பேசுகின்றா்ய
ரசித்தெழுந்து உரசுகின்றாய்
கணங்களுக்கும் பொருள் நிறைத்தாய்

எதிர்பார்ப்பை விதைத்து விட்டு
காத்திருப்பில். எங்கள் உலா
கனவினிலே வாழ்வெழுதி
கண்மணியாய் வளருகின்றாய்

எங்கள் சித்திரத்து பொற்சுடரே
சீரெழுதும் கனிமொழியே
உற்சவத்தின் பெருந்தேரில்
உலவ வரும் தேவதையே

காத்திருந்து தேடுகின்றோம்
கண்மணியே. வாராயோ
மணிவயிற்றை விட்டகன்று
மலர்மடியில் கொஞ்சியெழ……..

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading